Monday, August 11, 2008

அத்தை மகள்!!!





தாவணி ஊர்வலத்தில் முதன்முறைஒற்றை

தேவதையாய் நீ வந்திருந்தஓர் விடுமுறை

நாளில்எனைக் கண்டவுடன் உன் கால்

கட்டைவிரலால்தரையில் வடித்த

அரைவட்ட வெட்கம்...


படிப்பிற்காக நான் பட்டணம் கிளம்பியபோதுவெட்கமில்லாமல்

அழுதுநீ செய்த ஆர்பாட்டங்களைசுமந்து நிற்கும் தெருமுனை...


உன் விரல்பட்டு விடுதலையான‌'டா' போட்டழைத்த‌என் வகுப்புத்தோழியின்மிதிவண்டி சக்கர காற்று...


எல்லாம் முடிந்து போனஅக்கொடிய நாளில்யாருமறியாமல்மழையோடு கரைந்து போனஎன் கண்ணீர் துளிகள்...
தொலைந்து போன எதையோதேடியபோதுகண்ணீர் விதைத்துநினைவுகளையும் புரட்டிய‌துபழைய புகைப்பட தொகுப்பு...

2 comments:

Govindaraj.K said...

pokkanviduthi my home

Govindaraj.K said...

http://sites.google.com/site/kgovindarajtcbm/

visit my site all my update no there
i am chennai
Home down: pattkkottai ,thiruchitrambalam,pokkanviduthi