
நம்மூரு பசங்க எல்லாரும் சாப்ட்வேருங்கிற பேருல அமெரிக்காவுல வந்து நைட் ஆனா புல் டைட்டா தண்ணில புரளுறாய்ங்களாம்! அப்புறம் அங்குள்ள வெள்ளக்காரப் புள்ளங்க கையப் புடிக்கிறாய்ங்களாம்! கறுப்புப் புள்ளங்களுக்கு முத்தம்லாம் கொடுக்குறாய்ங்களாம்! கேட்டா 'சாட்டர்டே நைட் பீவர்'ன்னு பிலிமு காட்டுறாய்ங்களாம்! அது மட்டுமில்லாம ஆர்குட், ப்ளாக்குன்னு டைம கண்ணா பிண்ணான்னு செலவு பண்றாய்ங்களாம்! இப்படி சின்னா பின்னான்னு சீரழிஞ்சிட்டிருக்குற பயபுள்ளங்கள திருத்தனும்னு இந்திய தூதரகத்துள இருந்து உங்கள அமெரிக்காக்கு அனுப்பப் போறாங்களாம் தல", இந்திய இளைஞர்கள் அமெரிக்காவில் செய்யும் அட்டகாசங்களால் கடுப்பாகி, பாண்டி கத்திக் கொண்டிருக்கும்போதே கைப்புள்ள நெனப்பு வேறு எங்கோ சென்ற்து.
"எல்லாமே பயங்கர 'கிக்'கான மேட்டராவே இருக்குதே! அமெரிக்காவுல போன ஒடனே நம்ம பயபுள்ளைகள பாத்து நம்மலும் அந்த வித்தைகளை கத்துக்க வேண்டியதுதான்"
"டேய் பாண்டி, என்னடா சொல்ற? நான் அமெரிக்கா போயிட்டா நம்ம தமிழ் நாட்ட யாருடா பாத்துக்குவா?", நம்ம கைப்பு விட்டுக்கொடுக்காம பேசுற மாதிரி ஒரு ஆக்ட் விட்டாரு.
இதுதான் சான்ஸுன்னு நம்ம மூக்கன், "ஆமா, தல சொல்றது வாஸ்த்தவந்தான். தலைக்கு பதில்லா நான் போறேன்".
'ஆஹா! நமக்கே ஆப்பு அடிக்கிறானே இந்த மூக்கன்' கைப்பு சுதாரித்து, "டேய், இது என்ன சைக்கிளுக்கு காத்து அடிக்கிற சமாச்சாரமா? என்ன சின்னப் புள்ளத்தனமா இருக்கு!". கைப்பு ஆவேசமாய் கர்ஜித்தார்.
"சரி, நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவுமே தப்பில்ல. நான் அமெரிக்கா போறேன்னு சொல்லிரு", நாயகன் கமல் போல கைப்பு சீன் போட்டார்.
"சிங்கம் களத்துல எறங்கிடிச்சி!", பொக்க வாயில வெத்தலயப் போட்டுகிட்டு, கத்திகிட்டு நின்னுச்சு அந்தப் பெருசு.
ஒருவழியாய் கைப்புள்ள, பாண்டி, மூக்கன், ராசுக்குட்டி எல்லாரும் அமெரிக்கா நியூயார்க் வந்து இறங்கிட்டாங்க. டைம் ஸ்கொயர் பக்கத்துல இருக்கிற பல மாடிக் கட்டடத்துல, மொட்ட மாடில ஒரு கொட்டாய்ப் போட்டு, 'வருத்தப்படாத வாலிபகர்கள் சங்கம்'னு ஒரு பெரிய போர்டு மாட்டி, சுறுசுறுப்பா தல தூங்கிட்டு இருந்தாரு. பாண்டி, பக்கத்துல இருக்குற தமிழ் நாட்டு ஹோட்டல்ல இருந்து, சங்கத்துப் பேரச் சொல்லி, மீந்து போன இட்லியும், கெட்டுப் போன கெட்டிச் சட்னியும் வாங்கிட்டு வந்தார்.
"டேய் மூக்கா, ராசு, ஓடியாங்கடா! நம்ம தல எடத்துல எவனோ படுத்துக் கெடக்குறான்டா!", பாண்டி கணைக்க, எல்லாரும் வந்து அந்த உருவத்த மொத்தி எடுத்தனர். அப்புறம்தான் தெரிஞ்சுது, அங்க படுத்துக் கிடந்தது வேற யாருமில்ல, நம்ம கைப்புள்ளதான்னு. குளிருல நடுங்கி, பாண்டிபஜார்ல படுத்துக் கிடந்த பிச்சக்காரன்கிட்ட திருடுன கிழிஞ்ச ஸ்வெட்டரும், மங்கி தொப்பியும் போட்டுட்டு தல தூங்கிட்டு இருந்ததுல பாண்டி கன்பியுஸ் ஆகி, இப்படி ஒரு ஆர்ப்பாட்டம் ஆகிப்போச்சு.
"ஏண்டா? ஏன் இந்த கொல வெறி? கொஞ்ச நேரத்துல என் சித்தப்பூ போன எடத்துக்கே என்னைய அனுப்பி வெக்க பாத்தீங்களடா?"
"அது வந்து தல... நீங்கன்னு தெறியாம...", ராசு இழுத்தான்.
"அதுதான் மூச்சுக்கு முன்னூறு தடவ, நாந்தான்னு சொன்னனடா?"
"அது..."
"பேசாத! பேசாத! பேசாத!" கைப்பு எல்லாருத் தலைலயும் நாலு தட்டு தட்டினார்.
அடுத்த நாள் காலைல, சங்கத்து சிங்கங்கள் எல்லாரும் வழக்கமான, இத்துப்போன கிழிஞ்ச பனியன், பட்டாப்பெட்டியில் வர, கைப்பு மட்டும் பனியன் தெரியிற மாதிரி ரோஸ் கலர் கண்ணாடி ஜிப்பா போட்டுக்கிட்டு, கைலிய பட்டாப்பெட்டி தெரியிற மாதிரி தூக்கிக் கட்டிக்கிட்டு சிங்க நடைப் போட்டுக்கிட்டு வந்தார்.
அப்போது மூக்கன் மூச்சித் தெரிக்க ஓடி வந்தான். "அண்ணே! அண்ணே! நீங்க இங்க இருக்குறத தெரிஞ்சிகிட்டு, கட்டதொர இங்கேயும் வந்துட்டான்ணே!"
"ஆஹா! வந்துட்டான்யா! வந்துட்டான்யா! நம்மள மாசத்துக்கு ஒருதடவையாவது அடிச்சாதான் அவனுக்கு தூக்கம் வரும்போலிருக்கே! காட்டி கொடுத்துறுவாளோன்னு பயந்து ஆத்தாக்கிட்டக் கூட சொல்லாம கொள்ளாம வந்தேனே! இதுக்காக காசுக் கொடுத்து அமெரிக்கா வந்துருக்கானே இந்த நாதாரி பயப்புள்ள!", கைப்பு அடிவயிறு லேசாய் கலங்கியது.
"கட்டதொரைக்கு கட்டஞ்சரியில்லைன்னு நெனக்கிறேன். எடுடா வண்டிய".
"பாஸ், இந்த ஆங்கிள்ள இருந்து பாத்தா, கேப்டன் விஜய்காந்த் மாதிரியே இருக்கீங்க பாஸ்", சைக்கிள் கேப்பில் கெடா வெட்டினான் மூக்கன்.
"இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் அங்குலம் அங்குலமா பிரிக்கப் போறான். என்னடா ஆங்கிள் பாத்துட்டு இருக்குற ஆங்கிள்"
இறக்குமதி செஞ்ச கைப்புள்ளையோட ஆத்மார்த்த மூனு சக்கர வண்டிய மூனு பேரும் தள்ளிட்டு வர, கைப்புள்ள டைவ் அடிச்சி அதுல உட்கார முயல, அப்புறம்தான் தெரிஞ்சுது, பாண்டி வண்டியோட சீட்ட நைட்டு தூங்குறதுக்கு எடுத்து அத திரும்ப வண்டில மாட்டாம விட்டது. கைப்புள்ள டிக்கில பெரிய ப்ளாஸ்டர் போடுற அளவு காயம்.
"ஆஹா! இவனுங்க அக்கப் போரு தாங்க முடியலப்பா. இப்படி ஏதாவது ஏடாகூடமா செஞ்சே ஒடம்ப ரணகளமாக்கிட்டானுங்கப்பா"
கைப்பு அப்படியே வலிய தாங்கிக்கிட்டு ஒரு லுக்கு விட, மூவரும் வண்டிய தள்ளினார்கள்.
"டேய் டேய் டேய்! எங்கடா இந்த பக்கம் போறீங்க"
"கட்டதொர இந்த பக்கமாத்தான் வர்ரான் தல"
"இன்னுமா? இன்னைக்கு இது போதாதா? வண்டிய அந்த பக்கம் திருப்புங்கடா பொசக்கெட்டப் பசங்களா...", தப்பித்தோம் பிழைத்தோமென்று கைப்புள்ள பெருமூச்சு விட்டார்.
கைப்புள்ளையின் வண்டி ரோட்டில் வேகமாய் சென்றுக் கொண்டிருக்க, அதனை ஓர் போலிஸ் கார் வழிமறித்தது. "என்னடா இது, நம்மூரு பயபுள்ளைங்கதான் கார உள்ளவுட்டு, கைலாசத்துக்கு டிக்கெட் கொடுப்பாய்ங்க. இவனுங்களுமா?"
"தம்பி, இந்த கைப்புள்ள வண்டியோட பவர் தெரியாம உள்ள விழுந்து சாக பாத்த. அண்ணன் நல்ல மூடுல இருந்ததால தப்பிச்ச. சரி நீ யாரு?"
"ஐ எம் எ காப்"
"இங்க பாருய்யா? காப்பாம்ல காப்பு. காப்புன்னா கைல மாட்டிக்க. ஏன் ரோட்டுல வந்து விழுற", நையாண்டியாய் கைப்பு கலாய்க்க, வெவரந்தெரிஞ்ச ராசு, "பாஸ், காப்புன்னா போலிஸ்னு அர்த்தம்பாஸ்".
"போலிஸ்னா காக்கிச்ச்ட்டைல வந்திருக்கனும்ல! வந்திருக்கனும்ல! வந்திருக்கனும்ல!", எக்கோவாய் கூவினார் தல.
"மப்டில வந்திருக்காருன்னு நெனக்கிறேன் தல", ராசு தன்னோட இன்டெலிஜென்ட காட்டினார். இவனுங்க காமெடி தாங்க முடியாம போலிஸ் தன்னோட துப்பாக்கி பைல கைய வச்சார். இதை கவனித்த கைப்பு, "நான் ஒத்துக்கிறேன்! நீ காக்கிச்சட்டப் போடாதக் காப்புங்றத ஒத்துக்கிறேன்! பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்".
தல இன்னைக்கி யார்கிட்டையும் அடிவாங்கலயேன்னு வயித்தெரிச்சல்ல இருந்த பாண்டி இதுதான் சாக்குன்னு, "என்னடா நீ காப்புன்னா பெரிய பருப்பா? எங்க தல இந்தியால எத்தன போலிஸ பந்தாடிருக்காறு தெரியுமா? எங்க பாஸ் கருணையோடு பாத்தா பில்டிங்குக்கு நடுவுல புறா பறக்கும்! கொடூரமா பாத்தா ஏரோப்ளேன் பறக்கும்!" என்று ஒரு பிட்ட போட, தல பீதியாகி "டேய்! அவனே சும்மா விட்டாக்கூட நீங்க மாட்டி விட்டுருவீங்க போலிருக்கே"
"சும்மா இருங்க தல. அவங்களுக்குத்தான் தமிழ் தெரியாதே தல"
"அப்படீனா, இன்னும் ரெண்டு மூனு பிட்ட சேத்துப் போடு. நம்மூர்ல எங்க நம்மல போட்டு மொத்திருவாய்ங்களோன்னு பயந்து பயந்தே பாதி உயிரு போயிரும்", என்று தல சொல்லிக் கொண்டிருக்கும்போதே, "நீதான் நாங்க தேடிட்டு இருக்குற அந்த தீவிரவாதியா?" என்று அந்த போலிஸ்காரர் தமிழில் சொல்ல, தலையைத் தவிர மத்தவர்கள் அப்ஸ்கான்ட்.
"எல்லாமே பயங்கர 'கிக்'கான மேட்டராவே இருக்குதே! அமெரிக்காவுல போன ஒடனே நம்ம பயபுள்ளைகள பாத்து நம்மலும் அந்த வித்தைகளை கத்துக்க வேண்டியதுதான்"
"டேய் பாண்டி, என்னடா சொல்ற? நான் அமெரிக்கா போயிட்டா நம்ம தமிழ் நாட்ட யாருடா பாத்துக்குவா?", நம்ம கைப்பு விட்டுக்கொடுக்காம பேசுற மாதிரி ஒரு ஆக்ட் விட்டாரு.
இதுதான் சான்ஸுன்னு நம்ம மூக்கன், "ஆமா, தல சொல்றது வாஸ்த்தவந்தான். தலைக்கு பதில்லா நான் போறேன்".
'ஆஹா! நமக்கே ஆப்பு அடிக்கிறானே இந்த மூக்கன்' கைப்பு சுதாரித்து, "டேய், இது என்ன சைக்கிளுக்கு காத்து அடிக்கிற சமாச்சாரமா? என்ன சின்னப் புள்ளத்தனமா இருக்கு!". கைப்பு ஆவேசமாய் கர்ஜித்தார்.
"சரி, நாலு பேரு நல்லா இருக்கனும்னா எதுவுமே தப்பில்ல. நான் அமெரிக்கா போறேன்னு சொல்லிரு", நாயகன் கமல் போல கைப்பு சீன் போட்டார்.
"சிங்கம் களத்துல எறங்கிடிச்சி!", பொக்க வாயில வெத்தலயப் போட்டுகிட்டு, கத்திகிட்டு நின்னுச்சு அந்தப் பெருசு.
ஒருவழியாய் கைப்புள்ள, பாண்டி, மூக்கன், ராசுக்குட்டி எல்லாரும் அமெரிக்கா நியூயார்க் வந்து இறங்கிட்டாங்க. டைம் ஸ்கொயர் பக்கத்துல இருக்கிற பல மாடிக் கட்டடத்துல, மொட்ட மாடில ஒரு கொட்டாய்ப் போட்டு, 'வருத்தப்படாத வாலிபகர்கள் சங்கம்'னு ஒரு பெரிய போர்டு மாட்டி, சுறுசுறுப்பா தல தூங்கிட்டு இருந்தாரு. பாண்டி, பக்கத்துல இருக்குற தமிழ் நாட்டு ஹோட்டல்ல இருந்து, சங்கத்துப் பேரச் சொல்லி, மீந்து போன இட்லியும், கெட்டுப் போன கெட்டிச் சட்னியும் வாங்கிட்டு வந்தார்.
"டேய் மூக்கா, ராசு, ஓடியாங்கடா! நம்ம தல எடத்துல எவனோ படுத்துக் கெடக்குறான்டா!", பாண்டி கணைக்க, எல்லாரும் வந்து அந்த உருவத்த மொத்தி எடுத்தனர். அப்புறம்தான் தெரிஞ்சுது, அங்க படுத்துக் கிடந்தது வேற யாருமில்ல, நம்ம கைப்புள்ளதான்னு. குளிருல நடுங்கி, பாண்டிபஜார்ல படுத்துக் கிடந்த பிச்சக்காரன்கிட்ட திருடுன கிழிஞ்ச ஸ்வெட்டரும், மங்கி தொப்பியும் போட்டுட்டு தல தூங்கிட்டு இருந்ததுல பாண்டி கன்பியுஸ் ஆகி, இப்படி ஒரு ஆர்ப்பாட்டம் ஆகிப்போச்சு.
"ஏண்டா? ஏன் இந்த கொல வெறி? கொஞ்ச நேரத்துல என் சித்தப்பூ போன எடத்துக்கே என்னைய அனுப்பி வெக்க பாத்தீங்களடா?"
"அது வந்து தல... நீங்கன்னு தெறியாம...", ராசு இழுத்தான்.
"அதுதான் மூச்சுக்கு முன்னூறு தடவ, நாந்தான்னு சொன்னனடா?"
"அது..."
"பேசாத! பேசாத! பேசாத!" கைப்பு எல்லாருத் தலைலயும் நாலு தட்டு தட்டினார்.
அடுத்த நாள் காலைல, சங்கத்து சிங்கங்கள் எல்லாரும் வழக்கமான, இத்துப்போன கிழிஞ்ச பனியன், பட்டாப்பெட்டியில் வர, கைப்பு மட்டும் பனியன் தெரியிற மாதிரி ரோஸ் கலர் கண்ணாடி ஜிப்பா போட்டுக்கிட்டு, கைலிய பட்டாப்பெட்டி தெரியிற மாதிரி தூக்கிக் கட்டிக்கிட்டு சிங்க நடைப் போட்டுக்கிட்டு வந்தார்.
அப்போது மூக்கன் மூச்சித் தெரிக்க ஓடி வந்தான். "அண்ணே! அண்ணே! நீங்க இங்க இருக்குறத தெரிஞ்சிகிட்டு, கட்டதொர இங்கேயும் வந்துட்டான்ணே!"
"ஆஹா! வந்துட்டான்யா! வந்துட்டான்யா! நம்மள மாசத்துக்கு ஒருதடவையாவது அடிச்சாதான் அவனுக்கு தூக்கம் வரும்போலிருக்கே! காட்டி கொடுத்துறுவாளோன்னு பயந்து ஆத்தாக்கிட்டக் கூட சொல்லாம கொள்ளாம வந்தேனே! இதுக்காக காசுக் கொடுத்து அமெரிக்கா வந்துருக்கானே இந்த நாதாரி பயப்புள்ள!", கைப்பு அடிவயிறு லேசாய் கலங்கியது.
"கட்டதொரைக்கு கட்டஞ்சரியில்லைன்னு நெனக்கிறேன். எடுடா வண்டிய".
"பாஸ், இந்த ஆங்கிள்ள இருந்து பாத்தா, கேப்டன் விஜய்காந்த் மாதிரியே இருக்கீங்க பாஸ்", சைக்கிள் கேப்பில் கெடா வெட்டினான் மூக்கன்.
"இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் அங்குலம் அங்குலமா பிரிக்கப் போறான். என்னடா ஆங்கிள் பாத்துட்டு இருக்குற ஆங்கிள்"
இறக்குமதி செஞ்ச கைப்புள்ளையோட ஆத்மார்த்த மூனு சக்கர வண்டிய மூனு பேரும் தள்ளிட்டு வர, கைப்புள்ள டைவ் அடிச்சி அதுல உட்கார முயல, அப்புறம்தான் தெரிஞ்சுது, பாண்டி வண்டியோட சீட்ட நைட்டு தூங்குறதுக்கு எடுத்து அத திரும்ப வண்டில மாட்டாம விட்டது. கைப்புள்ள டிக்கில பெரிய ப்ளாஸ்டர் போடுற அளவு காயம்.
"ஆஹா! இவனுங்க அக்கப் போரு தாங்க முடியலப்பா. இப்படி ஏதாவது ஏடாகூடமா செஞ்சே ஒடம்ப ரணகளமாக்கிட்டானுங்கப்பா"
கைப்பு அப்படியே வலிய தாங்கிக்கிட்டு ஒரு லுக்கு விட, மூவரும் வண்டிய தள்ளினார்கள்.
"டேய் டேய் டேய்! எங்கடா இந்த பக்கம் போறீங்க"
"கட்டதொர இந்த பக்கமாத்தான் வர்ரான் தல"
"இன்னுமா? இன்னைக்கு இது போதாதா? வண்டிய அந்த பக்கம் திருப்புங்கடா பொசக்கெட்டப் பசங்களா...", தப்பித்தோம் பிழைத்தோமென்று கைப்புள்ள பெருமூச்சு விட்டார்.
கைப்புள்ளையின் வண்டி ரோட்டில் வேகமாய் சென்றுக் கொண்டிருக்க, அதனை ஓர் போலிஸ் கார் வழிமறித்தது. "என்னடா இது, நம்மூரு பயபுள்ளைங்கதான் கார உள்ளவுட்டு, கைலாசத்துக்கு டிக்கெட் கொடுப்பாய்ங்க. இவனுங்களுமா?"
"தம்பி, இந்த கைப்புள்ள வண்டியோட பவர் தெரியாம உள்ள விழுந்து சாக பாத்த. அண்ணன் நல்ல மூடுல இருந்ததால தப்பிச்ச. சரி நீ யாரு?"
"ஐ எம் எ காப்"
"இங்க பாருய்யா? காப்பாம்ல காப்பு. காப்புன்னா கைல மாட்டிக்க. ஏன் ரோட்டுல வந்து விழுற", நையாண்டியாய் கைப்பு கலாய்க்க, வெவரந்தெரிஞ்ச ராசு, "பாஸ், காப்புன்னா போலிஸ்னு அர்த்தம்பாஸ்".
"போலிஸ்னா காக்கிச்ச்ட்டைல வந்திருக்கனும்ல! வந்திருக்கனும்ல! வந்திருக்கனும்ல!", எக்கோவாய் கூவினார் தல.
"மப்டில வந்திருக்காருன்னு நெனக்கிறேன் தல", ராசு தன்னோட இன்டெலிஜென்ட காட்டினார். இவனுங்க காமெடி தாங்க முடியாம போலிஸ் தன்னோட துப்பாக்கி பைல கைய வச்சார். இதை கவனித்த கைப்பு, "நான் ஒத்துக்கிறேன்! நீ காக்கிச்சட்டப் போடாதக் காப்புங்றத ஒத்துக்கிறேன்! பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்".
தல இன்னைக்கி யார்கிட்டையும் அடிவாங்கலயேன்னு வயித்தெரிச்சல்ல இருந்த பாண்டி இதுதான் சாக்குன்னு, "என்னடா நீ காப்புன்னா பெரிய பருப்பா? எங்க தல இந்தியால எத்தன போலிஸ பந்தாடிருக்காறு தெரியுமா? எங்க பாஸ் கருணையோடு பாத்தா பில்டிங்குக்கு நடுவுல புறா பறக்கும்! கொடூரமா பாத்தா ஏரோப்ளேன் பறக்கும்!" என்று ஒரு பிட்ட போட, தல பீதியாகி "டேய்! அவனே சும்மா விட்டாக்கூட நீங்க மாட்டி விட்டுருவீங்க போலிருக்கே"
"சும்மா இருங்க தல. அவங்களுக்குத்தான் தமிழ் தெரியாதே தல"
"அப்படீனா, இன்னும் ரெண்டு மூனு பிட்ட சேத்துப் போடு. நம்மூர்ல எங்க நம்மல போட்டு மொத்திருவாய்ங்களோன்னு பயந்து பயந்தே பாதி உயிரு போயிரும்", என்று தல சொல்லிக் கொண்டிருக்கும்போதே, "நீதான் நாங்க தேடிட்டு இருக்குற அந்த தீவிரவாதியா?" என்று அந்த போலிஸ்காரர் தமிழில் சொல்ல, தலையைத் தவிர மத்தவர்கள் அப்ஸ்கான்ட்.
No comments:
Post a Comment