என்றும் போல் எவ்வித
மாற்றமுமின்றி பிறக்கும்இன்றைய நாட்களும்,
சுற்றமும்வரிகளுக்குள் விளக்க
முடியாதொருபுதுமையாய் நகர்கின்றன...
தனிமையும்,மௌனமும்,வெறுமையும் முழுமையும்
ஒருசேரஅமைந்த தன்மையுமாய்கடந்து செல்கின்றனதினசரிப் பொழுதுகள்...என்றோ விதைத்தஉன்னுடனான மிதிவண்டி
பயணங்கள்என் இருத்தலின் உண்மையைநினைவூட்டியபடியேநித்தமும் துளிர்க்கின்றன இன்றைய நினைவுகளாய்..
.மின்விசிறியின்எறிச்சலூட்டும்கீச்சிடும்
இரைச்சலைகூடரசிக்கபழகிக் கொண்டது
உள்ளமும்அவ்வழியேஏனைய உறுப்புகளும்...இப்பொழுதெல்லாம்இயற்கையோடு சண்டையிடுவதுஅன்றாடமாகிவிட்டது,
என்னவள் உன்னோடு ஒப்பிட்டவாறே!!கசக்கி
எறியப்பட்டகாகிதங்களுக்கு
நடுவேகண்ணீர் விட்டபடிஉன்னை
அலங்கரிக்க முடியா சாபத்தில்நிராகரிக்கப்பட்ட
வரிகள்...பரவாயில்லை...
காதல் கற்றுக் கொடுத்ததுநித்திரையிலும்
நகைக்கும்கிறுக்கன் என்ற பெயர் மட்டுமல்லகண்டபடி
கிறுக்கும் கவிஞன் என்ற பட்டமும்தான்!!!
No comments:
Post a Comment